பாடல் இடம்பெற்ற திரைப்படம் இந்திர 1990களில் வெளியான படம். ரஹ்மான் வெற்றிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்த காலகட்டம் இந்தப்படமும் ரஹ்மானின் வெற்றிகளுக்கு பக்கபலமாக இருந்தது. இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்தான் நிலா காய்கின்றது ......... பாடல். வைரமுத்துவின் வரிகளில் ஹரிஹரன் மற்றும் ஹரிணியின் குரலில் இடம்பெற்ற இந்த பாடல் இரு வகையில் உள்ளது.
1>
நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்
.......... நிலா காய்கிறது .........
அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்
.......... நிலா காய்கிறது .........
2>
நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்
.......... நிலா காய்கிறது .........
அதோ போகின்றது கானல் மேகம் மழையை காணவில்லையே
இதோ கேட்கின்றது குயிலின் சோகம் இசையும் கேட்கவில்லையே
இந்த பூமியே பூவனம் எந்தன் பூவிதழ் சருகுதே
இந்த வாழ்கையே சீதனம் அதில் ஜீவனே தேயுதே
.......... நிலா காய்கிறது .........
இந்த இரு பாடலுமே அருமை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment