Thursday, September 25, 2008

கண்ணே கலைமானே.....

மூன்றாம் பிறை உலக நாயகனுக்கு மட்டுமல்ல பலகலைஞர்களுக்கு பெயர்தேடி தந்த படம். படத்தில் மனநிலை சரியில்லாத கதாபத்திரத்தில் நடிகை ஸ்ரீ தேவி நடித்திருப்பார் அவரை பாடி தூங்க வைப்பதற்காக கமல்பாடுவதாக நான் பாடல் படமாக்கப்பட்டு இருக்கும்.
இசை ஞானியின் மென்மையான இசையில் ஜேசுதாசின் தேனான குரலில் அமைந்த இந்தபாடல் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட ஒரு பாடல் கவிஞர் கண்ணதாசன் இப்பாடலை எழுதி இருந்தார்.

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு..
பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே.. கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்..
எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி...
நீதானே என் சந்நிதி...

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

பாடல் வரிகள் அற்புதம் இந்த மென்மையான பாடலை நீங்களும் ஒருதடவை பார்த்து இரசியுங்கள்


No comments: