Saturday, July 12, 2008

மலர்களே மலர்களே இது என்ன........

1996 ம் ஆண்டு வெளிவந்த படம் லவ் பேர்ட்ஸ் பிரபுதேவா மற்றும் நக்மாவின் நடிப்பிலும் இசைப்புயலின் இசையிலும் வெளியான படம் இது. படத்தின் பாடல்கள் அனைத்தும் எல்லோராலும் ரசிக்கபட்டன அத்திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல்தான் இந்த பாடல்
பாடலை எழுதியவர் வைரமுத்து பாடலை பாடியவர்கள் ஹரிஹரன் மற்றும் சித்ரா. ஹரிஹரனை வெளி உலகுக்கு காட்டியவர் இசைப்புயல் எனலாம். அந்த வகையில் ஹரிஹரன் சித்ரா மற்றும் ரஹ்மான் கூட்டணியின் மற்றுமொரு வெற்றி பாடல் இதுவாகும்


மலர்களே, மலர்களே, இது என்ன கனவா?
மலைகளே, மலைகளே, இது என்ன நினைவா?
உருகியதே.. எனதுள்ளம்..
பெருகியதே.. விழிவெள்ளம்..

விண்ணோடும் நீதான்..
மண்ணோடும் நீதான்..
கண்ணோடும் நீதான்.. வா..ஆ.அஅஅ..
(மலர்களே,..)(விண்ணோடும்..)

மேகம் திறந்துகொண்டு,
மண்ணில் இறங்கி வந்து,
மார்பில் ஒளிந்துக் கொள்ள, வா.. வா..
மார்பில் ஒளிந்துக் கொண்டால்,
மாறன் அம்பு வரும்,
கூந்தலில் ஒளிந்துக் கொள்ள வரவா..

என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா, அறையா!
மலர் சூடும் வயதில் என்னை, மறந்து போவது தான் முறையா?

நினைக்காத நேரமில்லை; காதல் ரதியே, ரதியே..
உன் பேரைச் சொன்னால் போதும், நின்று வழிவிடும் காதல் நதியே..

என் ஸ்வாசம் உன் மூச்சில்..
உன் வார்த்தை என் பேச்சில்..
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம், என் வாழ்வே வா..
(மலர்களே,..) (விண்ணோடும்..)

பூவில் நாவிருந்தால்,
காற்று வாய்திறந்தால்,
காதல், காதல் என்று பேசும்..

நிலா தமிழறிந்தால்,
அலை மொழி அறிந்தால்,
நம் மேல் கவி எழுதி வீசும்..

வாழ்வோடு வளர்பிறை தானே, வண்ண நிலவே, நிலவே..
வானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே..

உறங்காத நேரம் கூட உந்தன் கனவே, கனவே..
ஊனோடு உயிரைப் போலே உறைந்து போனது தான் உறவே..

மறக்காது உன் ராகம்,
மரிக்காது என் தேகம்,

உனக்காக உயிர் வாழ்வேன், வா என் வாழ்வே வா..
(மலர்களே,..) (விண்ணோடும்..)

மென்மையான இசை அமைதியான நேரத்தில் கண்ணை மூடி கேட்டுப்பாருங்கள் உங்களை அறியாமலே உறங்கி விடுவீர்கள் ஹரிஹரனின் குரல் அற்புதம் இந்த பாடலை ஒரு தடவை கேட்டு பாருங்கள்


powered by www.isaipriyan.blogspot.com



பாடல் காட்சி முழுவதும் வெளி நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.
பனி படர்ந்த மலைகள் மஞ்சள் பூக்கள் நிறைந்த அழகியதோட்டம் கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகள் பிரபுதேவாவின் நடனம் எல்லாம் சேர்ந்து பாடல் காட்சிக்கு பலம் சேர்த்துள்ளன இரட்டை வேடம் போன்று இரண்டு மூன்று பிரபுதேவாக்கள் தோன்றுவது அப்போதைய தமிழ் திரைத்துறையில் புதிது அதனை நீங்களே பாருங்கள்




எனக்கு பிடித்த இந்த பாடல் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்

தென்பாண்டித் தமிழே என்...............

தென்பாண்டித்தமிலே என் சிங்காரக் குயிலே இந்த பாடலில் ஒரு சிறப்பம்சம் உள்ளது இந்த பாடலை எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது. இசைஞானியின் இசையில் பாசப் பறவைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இதுவாகும். பாடலுக்கு ஜேசுதாசின் குரலோடு சித்ராவின் குரலும் இசையோடு மேலும் இனிமை சேர்க்கின்றது. இப்பாடல் அண்ணன் தங்கைகிடையிலான பாசத்தை பற்றி இடம்பெற்றுள்ளது. பாடல் வரிகள் அழகான கவிதை.

ஆண்: தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

பெண்: வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே
ஆண்: பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே
பெண்: அன்பு என்னும் கூண்டிலே ஆடிப் பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே
ஆண்: தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
பெண்: தாயைப் போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே
ஆண்: மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே நீ என்றும் வாழ வேண்டுமே

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

ஆண்: தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்றுதானம்மா
அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா
பெண் : கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தெய்வமே

ஆண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
பெண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
ஆண்: வாழ்த்துவேன் உனை போற்றுவேன் வாழ்வெல்லாம் உனை ஏற்றுவேன்
பெண்: காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே நாம் சேர்ந்து வாழ வேண்டுமே

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

நீங்களும் ஒரு தடவை கேட்டுப்பாருங்கள்





பாடல் ஒரு வீட்டிலும், கடற்கரையிலும் மாலை நேரம் படமாக்கப்பட்டுள்ளது.பாடல் காட்சியில் சிவகுமார், லட்சுமி, ராதிகா மற்றும் மோகன் ஆகியோர் தோன்றுகின்றனர். இதில் அண்ணனாக சிவகுமார் தங்கையாக ராதிகா இவர்கள் இருவரும் பாடுவதாக பாடல் இடம்பெறுகின்றது. அண்ணன் தங்கை பாசத்தை சொல்கின்றது பாடல் நீங்களும் ஒரு தடவை பாருங்கள்.





இந்த பாடல் நிச்சயம் உங்களை கவர்ந்திருக்கும் என நம்புகின்றேன்
.......மீண்டும் சந்திக்கின்றேன்.........

Sunday, July 6, 2008

மாலையில் யாரோ மனதோடு பேச.......

இசைஞானி இளையராஜா எல்லோர் நெஞ்சிலும் இடம் பிடித்த ஒரு சிறந்த இசையமைப்பாளர். இசைத்துறையில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி தமிழ் திரைத்துறையில் வெகுவாக கால் பதித்தவர்களில் ஒருவர். அவரின் இசையில் சத்ரியன் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலையே இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் 1990 ம் ஆண்டு விஜயகாந்த் மற்றும் பானுப்ப்ரியாவின் நடிப்பில் வெளி வந்த படம் சத்ரியன் அத்திரைப்படத்திலே சுவர்ணலதாவின் இனிமையான குரலில் இடம் பெற்ற பாடல் இனிமையான இசையோடு அழகான மாலை பொழுதில் தொடர்கின்றது பாடல்
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் பூத்ததே ஓ... ஓ...
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ... ஓ...
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று
காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற
வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒருநாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச

கரை மேல் நானும் காற்று வாங்கி
விண்ணைப்பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல
கடலில் பாயக் கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் பூத்ததே ஓ... ஓ...
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ... ஓ...
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச... என்ற பாடல் ஸ்வர்ணலதாவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்கிறார்கள்.

இது பற்றி ஸ்வர்ணலதா -
"நிஜம்தான். அந்தப் பாடல்தான் என் மியூசிக் கேரியரில் ஒரு திருப்பு முனையைத் தந்தது. என் பெயரை எல்லோரிடமும் அறிமுகப்படுத்தியது. அந்தப் பாடலின் டியூனை கேட்ட போதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இளையராஜா சார் இனிமையாக டியூன் போட்டிருந்தார். மணிரத்னம் சாரின் சொந்தப் படமான 'சத்ரியன்' படத்தில் வரும் இந்தப் பாடலை, நான் பாடல் டிராக்கில் மட்டும் தனியாக பாடவில்லை. மொத்த ஆர்க்கெஸ்ட்ராவோடும் சேர்ந்துதான் என் பாடலும் ரெக்கார்டிங் ஆனது. 1990-ல் பாடிய இந்தப் பாடலை இன்று வரைக்கும் ரசிகர்கள் மறக்கவில்லை. நான் போகும் கச்சேரிகளில் எல்லாம் கட்டாயம் என்னை இந்தப் பாடலையும் பாடச் சொல்வார்கள்.
ஒரு தடவை நான் பாடலை கேட்டு பாருங்கள்.






பாடல் படமாக்கபட்ட விதம் அற்புதம் ஒரு மாலை நேரம் அழகான ஒரு ஆற்றங்கரை இனிய சூழல் அழகான காட்சியமைப்பு நீங்களும் ஒரு தடவை இந்த பாடலை பாருங்கள்






சுவர்ணலதாவின் குரலில் மட்டுமல்ல இந்த சிறுமியின் குரலில் கூட நான் பாடல் இனிமைதான்

Saturday, July 5, 2008

பச்சைக் கிளிகள் தோளோடு………..

எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது இந்தியன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலாகும்.

இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,மனீஷா கொய்ராலா,சுக்னயா,நாசர்,கவுண்டமணி,செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். A. M. ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்ற படங்களில் இதுவும் ஒன்று. இதற்கு வாலி மற்றும் வைரமுத்து ஆகியோரின் பாடல் வரிகளும், ஹரிஹரன் ஜேசுதாஸ் பாலசுப்ரமணியம் போன்ற பிரபல பாடகர்களின் இணைவும் முக்கிய காரணமாகும். ஒளிப்பதிவு ஜீவா.

லஞ்சத்துக்கு கொள்ளிபோட துணிந்த வயோதிக தியாகியாக.. வெள்ளி நரையும், சுருங்கிய முகமும், தளர்ந்த உடலும்,தடுமாறாத உறுதியும் கொண்ட “இந்தியன்’ தாத்தாவாக நடித்து இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்களைகமல் கட்டிக்கொண்ட படமிது. கமலுக்கு தேசிய விருதினை பெற்று தந்ததோடு திரைத்துறையின் அதியுயர் விருதான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது.

இனி விடயத்துக்கு வருவோம் அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற “பச்சை கிளிகள் தோளோடு……..” என்ற பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள் நிச்சயம் ரசித்திருப்பீர்கள் நானும் கூட…..

ஜேசுதாஸின் அற்புதமான குரல் பாடலுக்கு மேலும் பலம். பாடல் என்கின்ற பெயரில் கொச்சைத்தனமான வரிகள் எதுவும் இல்லாமல் ஒரு பாடலை கொடுத்ததற்கு கவிஞருக்கும் பாடலை அனுமதித்ததற்கு இயக்குனருக்கும் ஒரு சபாஷ் போடலாம்.

“பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை…” என்று மனித வாழ்க்கையின் ஆனந்தங்களை சொல்கின்றது.
அன்பில் தான் வாழ்க்கை இருக்கின்றது பணம் எதற்கு…. அழகாக சொல்கின்றார் கவிஞர். ஒரு சிறிய விவசாயக்குடும்பம் பெற்றோ இரண்டு பிள்ளைகள் , அவர்களின் வாழ்க்கையின் சந்தோசங்களை , அவர்களுக்கிடையிலான அன்பை பதிவு செய்ய பாடல் உதவி உள்ளது. எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும் அந்த அழகிய வாழ்க்கை.
நீங்களும் கேட்டுப்பாருங்கள் இந்த பாடலை
இசை- ரஹ்மான் பாடியவர் - ஜேசுதாஸ்


அடுத்து பாடல் படமாக்கப்பட்ட விதம் பாடலிலே ஒளிப்பதிவாளர் ஜீவா மண் மணம் மாறாத, இயற்கையோடு இணைந்த ஒரு கிராமத்தை (கதையின்படி திருமுல்லைவாயில்) அழகாக பதிவு செய்துள்ளார். பச்சை பசேலென்ற வயல் வெளிகள், நீர் நிலைகள் போன்றவற்றை கண்முன் நிறுத்தி இருக்கின்றார். நடனம் என்ற போர்வையில் பாடலைக் கெடுக்காமல் கதை ஓட்டத்திலேயே பாடலை படமாக்கி இருப்பது பாராட்டத்தக்க விடயம். பொதுவாக அப்பாக்களுக்கு ஆண் பிள்ளைகளை விட பெண்பிள்ளைகள் மீது பாசம் அதிகம் அது இந்த பாடலில் காட்டப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவில் என்னை மிகவும் கவர்ந்த காட்சி பானைக்கு மண் குழைக்கும் இடத்தில் எல்லோரும் ஆட முயற்சி செய்து சறுக்கி விழுவதும் அதில் முதிய வயது கமல் விழாமல் ஆடும் போது பின்னால் நின்று மனைவி ஆடுவதும் கணவன் பார்த்தவுடன் சேலைத்தலைப்பை எடுத்து போர்த்துவதும் கவிதையான தருணங்கள். இது அந்த பாடல்க்காட்சி பார்த்து ரசியுங்கள் என்னோடு சேர்ந்து.


அறிமுகம்

நான் ஒரு தீவிரமான இசை ரசிகன். தினம் சப்பிடுறனோ இல்லையோ பாட்டுக்கள் கேட்பேன். நல்ல பாடல்களுக்கு காலம் இல்லை அது எந்த கால பாடலாயினும் அதனை விரும்பி கேட்பேன். அந்த வகையில் நான் விரும்பிக்கேட்ட கேட்டுக்கொண்டிருக்கின்ற பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப்பதிவு.