மௌனம் சம்மதம் படம் மமுட்டி அமலா நடிப்பில் வெளியானது.
இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல்தான் கல்யாண தேன் நிலா ..... இந்தபாடல் கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்டது. பாடலுக்கு இசை இளையராஜா பாடலைப்பாடியவர் ஜேசுதாஸ் அவரின் பாடல் என்றால் சொல்லவா வேண்டும் மனதை கொள்ளை கொள்ளும் மென்மையான பாடல் .....
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா
என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா
நீ தீண்டும் கையிலா
பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா
சங்கீதம் பாட்டிலா -
நீ பேசும் பேச்சிலா.
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் ??
உன் சொல்லிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
பாடல் ஒரு இரவுப்பொழுதில் படமாக்கபட்டுள்ளது நீங்கள் ஒருதடவை இந்த பாடலை அமைதியான நேரத்தில் இரவில் கேட்டுப்பாருங்கள் உங்களுக்கே புரியும் பாடலின் இனிமை
Thursday, September 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment