Saturday, July 12, 2008

தென்பாண்டித் தமிழே என்...............

தென்பாண்டித்தமிலே என் சிங்காரக் குயிலே இந்த பாடலில் ஒரு சிறப்பம்சம் உள்ளது இந்த பாடலை எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது. இசைஞானியின் இசையில் பாசப் பறவைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இதுவாகும். பாடலுக்கு ஜேசுதாசின் குரலோடு சித்ராவின் குரலும் இசையோடு மேலும் இனிமை சேர்க்கின்றது. இப்பாடல் அண்ணன் தங்கைகிடையிலான பாசத்தை பற்றி இடம்பெற்றுள்ளது. பாடல் வரிகள் அழகான கவிதை.

ஆண்: தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

பெண்: வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே
ஆண்: பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே
பெண்: அன்பு என்னும் கூண்டிலே ஆடிப் பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே
ஆண்: தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
பெண்: தாயைப் போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே
ஆண்: மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே நீ என்றும் வாழ வேண்டுமே

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

ஆண்: தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்றுதானம்மா
அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா
பெண் : கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தெய்வமே

ஆண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
பெண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
ஆண்: வாழ்த்துவேன் உனை போற்றுவேன் வாழ்வெல்லாம் உனை ஏற்றுவேன்
பெண்: காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே நாம் சேர்ந்து வாழ வேண்டுமே

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

நீங்களும் ஒரு தடவை கேட்டுப்பாருங்கள்





பாடல் ஒரு வீட்டிலும், கடற்கரையிலும் மாலை நேரம் படமாக்கப்பட்டுள்ளது.பாடல் காட்சியில் சிவகுமார், லட்சுமி, ராதிகா மற்றும் மோகன் ஆகியோர் தோன்றுகின்றனர். இதில் அண்ணனாக சிவகுமார் தங்கையாக ராதிகா இவர்கள் இருவரும் பாடுவதாக பாடல் இடம்பெறுகின்றது. அண்ணன் தங்கை பாசத்தை சொல்கின்றது பாடல் நீங்களும் ஒரு தடவை பாருங்கள்.





இந்த பாடல் நிச்சயம் உங்களை கவர்ந்திருக்கும் என நம்புகின்றேன்
.......மீண்டும் சந்திக்கின்றேன்.........

No comments: