Monday, November 10, 2008

மலரோடு மலர் இங்கு

மணிரத்னம் விருதுகளுக்காக படம் எடுப்பவர் என்று திரையுலகில் பலர் சொல்வதுண்டு அவரின் படைப்புக்கள் அதை பறைசாற்றும். 90 களின் ஆரம்பத்தில் மும்பையில் மதக்கலவரம் நிலவிய காலம் அதை களமாக வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட படம் பம்பாய். சிறந்த ஒரு திரைப்படம் அரவித்சாமியை நடிகனாக காட்டிய திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் A.R.ரஹ்மான்.
படத்தின் இறுதிக்காட்சியில் இடம் பெற்ற பாடல் இதுவாகும். இப்பாடலை பாடியவர் சித்ரா.


மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே!
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே

காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

துளியெல்லாம் கைகோர்த்து கடலாகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகளலெல்லாம் ஒன்றாகி மலையாகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்

விடியாத இரவென்றும் வானில் இல்லை
ஒலியோடு ஒலி சேரட்டும்



No comments: